மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக
December 21, 2011
December 11, 2011
உள்வெளி
கோணங்களை மாற்றிவைத்தாலும்
அக எதிரொளிப்பில்
ஒளியிழைகளைப் பற்றி
மேலேறி நிற்கிறது
குறுக்குவெட்டிலும் நோக்கி
பிழைகளைப் பட்டியலாக்கி
முடிவுகளை மேலேற்றி
வடிவம் செய்கிறது
சத்தமின்றி சில உயிர்களை
அச்சட்டகத்திலாக்கி
பார்வைக்கு மறைவாய்
அலையத்தொடங்குகிறேன்.
வின்மீண் தொலைவில்
வேறொரு உலகம் சமைத்தும்
பருவங்களில்
நீர் வற்றாத ஓவிய ஆறாக
உள்ளே தான் உறைந்திருக்கிறதது
உள்ளோடும் ஈர்ப்பில்
சுருங்கி சுருங்கி
அளவில்லாததும்
உருவில்லாததும் ஆனபின்னும்
நிரம்பாத வெற்றிடமும் கொண்டு..
இம்மாத வடக்குவாசலில் வெளிவந்திருக்கும் என் கவிதை
எழுதியவர்
முத்துலெட்சுமி/muthuletchumi
at
12:42 PM
9 comments:
வகைகள்
கவிதைகள்,
வடக்குவாசல்
Subscribe to:
Posts (Atom)
